துரைப்பாக்கம்: குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மாநகராட்சி, 15வது மண்டலம், 193வது வார்டுக்குட்பட்ட துரைப்பாக்கம் அறிஞர் அண்ணா நகர், 8வது தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு தெரு குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் பட்டு வருகிறது. இந்நிலையில், பைப்லைன் உடைப்பு காரணமாக இப்பகுதியில் கடந்த ஒரு வருடமாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், இந்த குடிநீரை பயன்படுத்த முடியாமல் தவிக்கும் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக காலி குடங்களுடன் அலையும் நிலை உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் என கூறப்படுகிறது.