×

போக்குவரத்துக்கு இடையூறு 2 வாலிபர்கள் கைது

திருக்காட்டுப்பள்ளி, பிப். 28:
திருக்காட்டுப்பள்ளி குடமுருட்டி லயன்கரை தெருவில் நேற்று முன்தினம் (26ம் தேதி) இரவு 2 வாலிபர்கள் மதுபோதையில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக காமகுரோதமாக திட்டி கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சிறப்பு சப்இன்ஸ்ஙபெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று 2 பேரையும் கலைந்து போகுமாறு கூறினர்.ஆனால் நடுப்படுகை மெயின்ரோடு சுரேஷ் மகன் மோகன்ராஜ் (19), ஒன்பத்துவேலி காமராஜர் காலனி ராஜேந்திரன் மகன் ரமேஷ் ஆகியோர் போலீசாரையும் மீறி தகாத வார்த்தைகளால் திட்டி கொண்டிருந்தனர். இதையடுத்து 2 பேரையும் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Tags :
× RELATED தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில்...