2 பேருக்கு வலைவீச்சு பேருந்து பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் உங்களுக்காக நாங்கள் என்ற தலைப்பில் துண்டு பிரசுரம் இனிப்பு விநியோகம்

தஞ்சை, பிப். 28: பேருந்து பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் “உங்களுக்காக நாங்கள்” என்ற தலைப்பில் துண்டு பிரசுரம் மற்றும் இனிப்புகள் பேருந்து பயணிகளுக்கு வழங்கப்பட்டது.தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் மண்டலம் சார்பில் நேற்று தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகளில் பயணிக்க கூடிய பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் அரசு பேருந்துகளின் சேவைகளை பயன்படுத்தி கொள்ளவும், பொதுத்துறை நிறுவனங்களை பலப்படுத்த கோரியும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. உதவி மேலாளர் சிவமயில்வேலன், தஞ்சை புறநகர் கிளை மேலாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர்கள் பிரகாஷ், மதன்ராஜ் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்று துண்டு பிரசுரங்களை அளித்தனர்.

Related Stories: