×

பண்டாரவாடை பகுதியில் சாலை அமைக்கும் பணி துவங்கவில்லை

பாபநாசம், பிப். 28: கும்பகோணம்-& தஞ்சாவூர் மெயின் சாலையில் பாபநாசம் அருகே பண்டாரவாடை பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் உள்ளாட்சி நிர்வாகத்தில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால் எந்த மேம்பாட்டு பணிகளும் நடக்கவில்லை. மேலவீதியில் சாலை அமைக்க ஜல்லிகள் கொட்டி வைத்து ஒரு மாதத்திற்கு மேலாகிறது. ஆனால் சாலை அமைப்பதற்கான பணி துவங்கவில்லையென அப் பகுதி பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் மேலவீதியிலிருந்து வடக்குவீதி உள்ளிட்ட தெருக்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை விரைந்து அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags :
× RELATED திருக்காட்டுப்பள்ளி முருகன் கோயிலில் திருக்கல்யாணம்