குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி அனைத்து கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், பிப். 28: குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் அருகில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் நேற்று 7 வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது. நேற்று நடந்த போராட்டத்தில் அனைத்து கட்சி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய சட்டங்களை திரும்ப பெற வேண்டும், டெல்லியில் போராட்டம் நடத்தியவர்களை படுகொலை செய்ததை கண்டிப்பது என கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி மத்திய அரசை கண்டித்து கோஷங்களிட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் திமுக நகர செயலாளர் தமிழழகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் விவேகானந்தன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னைபாண்டியன், திக மாவட்ட தலைவர் நிம்மதி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் முகம்மது செல்லப்பா, நீலப்புலிகள் கட்சி இளங்கோவன், சிஐடியூ கண்ணன், இந்திய தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைவர் ஜாபர், எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் இப்ராஹீம் மற்றும் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

.

Related Stories: