×

கரூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடக்கிறது

கரூர், பிப். 28: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெறுகிறது.தனியார்துறை நிறுவனங்களும் தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள அனைத்து வகை பதிவுதாரர்களும் சந்திக்கும் வேலைவாய்ப்பு முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு வெண்ணைமலை கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறிவழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெறுகிறது.இம்முகாமில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு. ஐடிஐ, டிப்ளமோ, கணினி பயிற்சி, பட்டம் முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தங்களின் கல்விசான்றிதழ்கள், சுயக்குறிப்புகளுடன் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெறலாம்.தனியார் துறை நிறுவனங்களும் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளை கொண்டோ அல்லது நேரில் வருகைபுரிந்தோ தேர்வு செய்து கொள்ளலாம். இதுஒரு இலவசப்பணியே ஆகும்.இதன்மூலம் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்பட மாட்டாது, தனியார் துறை பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள வேலைவாய்ப்பற்ற மற்றும் இவ்வாண்டு கல்லூரி படிப்பை முடித்து வேலைதேடும் இளைஞர்கள் இன்று நடைபெற உள்ள முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.



Tags : employment camp ,Karur ,
× RELATED கரூரில் போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டில் உலா வரும் கால்நடைகள்