×

தாந்தோணி லிங்கத்தூர் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

கரூர், பிப். 28: தாந்தோணிஒன்றியம் லிங்கத்தூர் அரசு தொடக்கப்பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்புதினம் கொண்டாடப்பட்டது.பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான இந்திய அரசியல் அமைப்பு மற்றும் ஐக்கியநாடுகள் சபையின் தீர்மானப்படி உறுதிமொழி ஏற்கப்பட்டது, நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் பரணிதரன் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் விளக்கம் அளித்தார்.ஆசிரியை ஜெயப்பிரியா பெண் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், தவறான தொடுதல் குறித்தும் உடல்ரீதியான மாற்றங்கள் குறித்தும்பேசினார்.



Tags : Tandoni Lingathoor School ,
× RELATED தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்