×

பொன்னமராவதியில் அரசு பேருந்துகளில் செல்ல பயணிகளுக்கு அறிவுறுத்தல்

பொன்னமராவதி, பிப்.28: பயணிகளிடையே நல்லுறைவை ஏற்படுத்தும் வகையில் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் பயணிகளுக்கு இனிப்பு வழங்கினர்.பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் சார்பில் அரசு பேருந்தில் பயணிகள் தொடர்ந்து பயணிக்க வலியுறுத்தி இனிப்பு வழங்கி வலியுறுத்தப்பட்டது. அரசு போக்குவரத்துக்கழகம், பொதுமக்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் அரசு போக்குவரத்துக்கழகத்தின் புதுக்கோட்டை மாவட்ட துணை மேலாளர் சுப்பு தலைமையில் கிளை மேலாளர் இளங்கோவன் மற்றும் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் பயணிகள் சிறந்த முறையில் அரசு பேருந்தில் பாதுகாப்பாக பயணிக்க அரசு போக்குவரத்துக்கழகம் ஆற்றிவரும் பணிகளை விளக்கியும், தொடர்ந்து அரசுப் பேருந்தில் பயணிக்க பொதுமக்களை வலியுறுத்தியும் இனிப்பு வழங்கினர். மேலும் அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் பயணிகளிடம் இன்முகத்துடன் சேவையாற்றும்படி அறிவுறுத்தினர். இதில் அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் மற்றும் பயணிகள் பங்கேற்றனர்.

Tags : passengers ,Ponnamaravathi ,
× RELATED அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி: 25க்கும் மேற்பட்டோர் காயம்!!