×

8 இடங்களில் நாளை நடக்கிறது சூரியூர் அரசு மேல்நிலை பள்ளியில் ரூ.2.20 கோடி மதிப்பில் கூடுதல் கட்டிடம் திறப்பு

விராலிமலை, பிப்.28: விராலிமலை அருகே உள்ள சூரியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் பள்ளி கட்டிடத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.விராலிமலை அருகே உள்ள சூரியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.2.20 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் பள்ளி கட்டத்தை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்சிக்கு மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை வகித்தார். மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரூ.2.20 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார்.மேலும் பள்ளியில் பயிலும் 91 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன், வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : building ,Suriyoor Government Secondary School ,
× RELATED தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும்...