தூத்துக்குடி, பிப்.28:புதூர் வட்டார ரேஷன்கடைகளில் பறக்கும் படையினர் நடத்திய ஆய்வில் முறைகேடாக பொருட்கள் விற்ற விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.தூத்துக்குடி மண்டல இணைப்பதிவாளர் ரவிச்சந்திரன் உத்தரவின்பேரில், புதூர் வட்டாரத்திலுள்ள 51 ரேஷன்கடைகளில் இணைப்பதிவாளர் தலைமையிலான பறக்கும் படையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.இந்த ஆய்வின்போது அத்தியாவசிய பொருட்களான அரிசி, சீனி, கோதுமை, மண்ணெண்ணெய், சிறப்பு பொது விநியோக திட்ட பொருட்களான துவரம்பருப்பு, சமையல்எண்ணெய் ஆகிய பொருட்களில் இருப்பு குறைவு ஏற்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.