கோவில்பட்டி, பிப்.28: கோவில்பட்டி ஜி.வி.என்.கல்லூரி மத்திய அரசின் உன்னத் பாரத் அபியான் திட்டத்தின்கீழ் இளையரசனேந்தல் ஆரம்ப சுகாதார நிலையத்துடன் இணைந்து இளையரசனேந்தலில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் சாந்திமகேஸ்வரி தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். இளையரசனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அலுவலர் டாக்டர் குருசாமி முன்னிலை வகித்தார். முகாமில் பொதுமக்களுக்கு ரத்த சர்க்கரை, சிறுநீரில் சர்க்கரை, ரத்த கொதிப்பு கண்டறிதல், பெண்களுக்கு கர்ப்பப்பை பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கிராம மக்கள் பங்கேற்று பயன்பெற்றனர் ஏற்பாடுகளை உன்னத் பாரத் அபியான் திட்ட ஒருங்கிணைப்பாளர் மகேஷ்குமார் செய்திருந்தார்.