குளத்தூர் அரசு பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கல்

குளத்தூர், பிப்.28: குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் முத்துக்குமார் தலைமை வகித்தார். துணை தலைமை ஆசிரியை கலைச்செல்வி முன்னிலை வகித்தார். முதுகலை ஆசிரியர் கென்னடி வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற எம்எல்ஏ சின்னப்பன் 182 மாணவர்களுக்கு இலவச சைக்கிளை வழங்கி பேசினார். தூத்துக்குடி மாவட்ட கவுன்சிலர் நடராஜ், விளாத்திகுளம் ஒன்றிய சேர்மன் முனியசக்தி ராமசந்திரன், 15வது வார்டு கவுன்சிலர் குருநாதன், அதிமுக ஒன்றிய செயலாளர் பால்ராஜ், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் குளத்தூர் சின்னச்சாமி, வைப்பாறு செண்பகப்பெருமாள், குளத்தூர் ஊராட்சி அதிமுக செயலாளர் பிச்சைமணி, கிளை செயலாளர் வேல்மயில், ஜெ. பேரவை நிர்வாகிகள் ராஜ், முத்துச்சாமி, குமார், முத்துவேல், செங்கால் ஆகியோர் பங்கேற்றனர். பட்டதாரி ஆசிரியர் பால்ராஜ் நன்றி கூறினார்.

Related Stories: