×

ஜமுனாமரத்தூரில் பரபரப்பு கிணற்றில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு கொலை செய்து வீசப்பட்டாரா? போலீஸ் விசாரணை

போளூர், பிப்.28: ஜமுனாமரத்தூரில் கிணற்றில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்டது. அவரை யாரேனும் கொலை செய்து கிணற்றில் வீசி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஜமுனாமரத்தூர் அடுத்த கீழ்விளாமூச்சி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை(45). இவரது மனைவி மின்னல்கொடி(40). இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். அண்ணாமலை சென்னையில் தங்கி கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். அவ்வப்போது ஊருக்கு வந்து செல்வாராம். மின்னல்கொடி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று காலை அதே கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் மின்னல்கொடி சடலமாக கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் ஜமுனாமரத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு கிணற்றில் இருந்து மேலே கொண்டு வந்தனர். அவரது உடலில் சுமார் 20 கிலோ எடையுள்ள கல் ஒன்று கயிற்றால் கட்டப்பட்டு இருந்தது. சடலம் மிகவும் அழுகிய நிலையில் இருந்ததால், அவர் இறந்து 2 அல்லது 3 நாட்கள் ஆகியிருக்கலாம் என தெரிகிறது.சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிந்து, மின்னல்கொடியை மர்ம நபர்கள் கொலை செய்து, கிணற்றில் வீசியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : death ,
× RELATED மாஸ்கோவில் நடைபெற்ற இசை...