வேலூர், பிப்.28: விரிஞ்சிபுரம் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் மா, தென்னை மரங்களை பராமரிக்கும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.தேசிய தோட்டக்கலை வாரியம் சென்னை மற்றும் வேளாண்மை அறிவியல் நிலையம் விரிஞ்சிபுரம் இணைந்து நடத்திய ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திற்கான மா மற்றும் தென்னைக்கான கருத்தரங்கம் நடந்தது. இதில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் நபார்டு வங்கியின் உதவி பொது மேலாளர் பங்காருகிரி, முன்னோடி வங்கியின் முதன்மை மேலாளர் ஜான் தியோடசியஸ், தோட்டக்கலை துணை இயக்குனர் ஜெயபாண்டி, வேளாண் துணை இயக்குனர் பாலா ஆகியோர் தலைமையில் நடந்தது.