×

குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல் அரசு கல்லூரியில் ஓலைச்சுவடி பயிலரங்கம்

திருத்துறைப்பூண்டி, பிப்.28: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தண்டலைச்சேரி பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி கல்லூரியில் ஒருநாள் ஓலைச்சுவடி பயிலரங்கம் நடைபெற்றது.கல்லூரி முதல்வர் முனைவர் சக்திவேல் தலைமை வகித்தார்.போரசிரியர் திலகர் வரவேற்றார். தஞ்சை தமிழ் பல்கலைக்கழக ஓலைச்சுவடி துறைத் தலைவர் கோவை மணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஓலைச்சுவடியின் பெருமைகள், அதன் இன்றியமையாத அவசியம் குறித்தும் ஓலைச்சுவடிகள் எப்படி பயில்வது என்பது குறித்தும் செயல்முறை விளக்கமளித்தார்.இதில் மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். முடிவில் பேராசிரியர் கண்ணன் நன்றி கூறினார்.

Tags : meeting ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...