×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் டிரான்ஸ்பர்: கலெக்டர் உத்தரவு

காஞ்சிபுரம், பிப்.27: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 11 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு.மருத்துவ விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பும் கமலக்கண்ணன், புனித தோமையார்மலை துணை வட்டார வளர்ச்சி அலுவலராகவும்,  புனித தோமையார் மலையில் பணியாற்றிய கே.என்.வெங்கடேசன், திருப்போரூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலராகவும்,  திருப்போரூரில் பணியாற்றிய மீனா, ஸ்ரீபெரும்புதூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலராகவும், ஸ்ரீபெரும்புதூரில் பணியாற்றிய கோமளா, வாலாஜாபாத் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக  (தணிக்கை )வும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வாலாஜாபாத் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக (சத்துணவு) திருக்கழுக்குன்றம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

லத்தூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக அச்சிறுப்பாக்கத்தில் பணியாற்றிய லோகநாதன், லத்தூரில் பணியாற்றிய அகமது, மதுராந்தகம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலராகவும், மதுராந்தகத்தில் பணியாற்றிய பாலாஜி,  உத்திரமேரூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கண்காணிப்பாளர் ஜெயக்குமார், சித்தாமூர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலராகவும்,  சித்தாமூரில் பணியாற்றிய சோமசுந்தரம், காட்டாங்கொளத்தூர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலராகவும்,
 காட்டாங்கொளத்தூரில் பணியாற்றிய சசிகுமாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கண்காணிப்பாளராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பணியிட மாற்றம் பெற்றவர்கள் உடனடியாக தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணியில் சேர்ந்து அந்த விவரத்தை கலெக்டர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

Tags : Development Officers ,Kanchipuram District ,Collector ,
× RELATED கோடை வெப்பத்தில் இருந்து வாகன...