திருச்சி, பிப்.26: திருச்சி அரிஸ்டோ ரவுண்டான பகுதியில் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் குடிநீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் அவ்வழியாக சென்ற வாகனஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.திருச்சி மாநகராட்சியில் உள்ள நான்கு கோட்டங்களில் மொத்தம் 65 வார்டுகள் உள்ளது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மாநகராட்சி அதிக கவனம் செலுத்தி வருகிறது. ேமலும் அடிப்படை வசதிகள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் நிர்வாகம் கூறுகிறது. ஆனால் திருச்சி மாநகராட்சியில் பொதுமக்கள் அடிப்படை பிரச்சனைகளான பாதாள சாக்கடை அடைப்பு, சாக்கடை கால்வாய்களை தூர்வாருதல், குடிநீர் குழாயில் உடைப்பு போன்றவர்களுக்கு சரியான முறையில் தீர்வு காண்பது இல்லை என்றும், புகார்தாரர் அலைக்கழிக்கப்பட்டு தொடர் புகாருக்கு பிறகு குறைகள் சிரமைக்கப்படுவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.