திருக்காட்டுப்பள்ளி, பிப். 27: பூண்டிமாதா பேராலயத்தில் சாம்பல் புதன் வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.
திருக்காட்டுப்பள்ளி அடுத்த பூண்டிமாதா பேராலயம் கத்தோலிக்க கிறிஸ்தவ பேராலயங்களில் ஒன்றாகும். இங்கு நேற்று காலை சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது.கிறிஸ்துவின் பாடுகள், இறப்பு மற்றும் உயிர்ப்பு ஆகியவற்றை நினைவு கூறும் வகையில் தவக்கால துவக்கமாக நோன்பு, தவம், கடவுளின் இறக்கத்தை அனுபவிக்கும் வகையில் நேற்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. மனம் மாறுதலுக்கு இந்த நோன்பு ஒரு வாய்ப்பாக கருதப்படுகிறது. பழைய குருத்தோலைகளை எரித்து சாம்பல் தயாரிக்கப்பட்டது.நேற்று காலை 6 மணி மற்றும் 8.30 மணிக்கு பேராலய அதிபரும் பங்குத்தந்தையுமான பாக்கியசாமி தலைமையில் திருப்பலி பூஜை நடந்தது. இதில் கலந்து கொண்ட கிறிஸ்தவர்களுக்கு நெற்றியில் சாம்பல் பூசி ஆசி வழங்கப்பட்டது.