கல்வடங்கம் அங்காளம்மன் கோயில் தேர் திருவிழா

இடைப்பாடி, பிப்.27: கல்வடங்கம் அங்காளம்மன் கோயில் தேர்திருவிழா நடந்தது. இடைப்பாடி அருகே கல்வடங்கம் அங்காளம்மன் கோயில் மகா சிவராத்திரியையொட்டி தேர்திருவிழா நடந்தது. விழாவில் அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோயில் செயல் அலுவலர் கோகிலா, பரம்பரை அறங்காவலர் தலைவர் மகிபாலன் ஆகியோர் நே்றறு தேரை வடம் பிடித்து தேரிழுத்தனர். விழாவில் திரளான மக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நாளை சத்தாபரண நிகழ்ச்சி நடக்கிறது.

Related Stories: