×

அறிவிக்கப்படாத மின்வெட்டால் அவதி

போச்சம்பள்ளி, பிப்.27: போச்சம்பள்ளி பகுதியில், சமீப காலமாக இரவு மற்றும் பகல் நேரங்களில் எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் அடிக்கடி  மின் தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி  வருகிறார்கள். கோடைக்கு முன்பே, வாட்டி வதைத்து வரும் வெயிலால் அவதிப்பட்டு வரும் மக்கள், அறிவிக்கப்படாத மின் வெட்டால் மேலும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, அறிவிக்கப்படாத மின்வெட்டை தவிர்த்து, சீரான மின்விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED சீதாராமர் திருக்கல்யாணம்