தூத்துக்குடி, பிப்.27: தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து முதல் கூட்டம் நடந்தது. தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து முதல் கூட்டம் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சத்யா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பஞ்சாயத்து உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு தீர்மானங்கள் மீதான விவாதம் நடந்தது. கூட்டத்தில் திருச்செந்தூரில் நடந்த விழாவில் சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்படத்தை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.