×

கூடுதல் டவுன் பஸ் இயக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்

ஆர்.எஸ்.மங்கலம், பிப். 27: ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து நயினார்கோவிலுக்கு கூடுதல் டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஏராளமான பொதுமக்கள் மிகவும் பிரசித்தி பெற்ற நயினார்கோவிலில் உள்ள நாகநாத சுவாமியை தரிசனம் செய்ய செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். எனவே ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து அரியான்கோட்டை, பணிதிவயல், நகரம் வழியாக நயினார்கோவிலுக்க கூடுதலாக டவுன் பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து இப்பகுதி பொது மக்கள் கூறுகையில், ‘கூடுதல் பஸ்கள் இல்லாத காரணத்தால் இப்பகுதியல் உள்ள நாங்கள் மிகுந்த சிரமத்திற்க்கு உள்ளாகின்றோம். ஆர்.எஸ்.மங்கலம். செட்டியமடை, புலிவீரதேவன் கோட்டை, குயவனேந்தல், அரியான்கோட்டை, பணிதிவயல் போன்ற கிராமங்களில் உள்ள நாங்கள் சரியான பஸ் வசதி இல்லாத காரணத்தால் இளையான்குடி, வழியாக பரமக்குடி சென்று சுமார் 45 கி.மீ. சுற்றி வர வேண்டிய சூழல் உள்ளது. இதனால் சுமார் 25 கி.மீ. தூரம் வீணாக சுற்றி வர வேண்டி உள்ளது. இதனால் பணம் விரையம் மற்றும் கால விரையம் ஆகிறது. எனவே சம்மந்தபட்ட நிர்வாகம் பொதுமக்களின் நலன் கருதி கூடுதல் டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும்’ என்றனர்.

Tags :
× RELATED கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்