தீக்குளித்த மெக்கானிக் சாவு

அலங்காநல்லூர், பிப்.27: அலங்காநல்லூர் அருகே குலமங்கலம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த டூவீலர் மெக்கானிக் சேவாக். இவர் நேற்று முன்தினம் இவரது சகோதரர் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு அப்பகுதியில் உள்ள கண்மாய்க்கு சென்றுள்ளார். பின்னர் அந்த வாகனத்தில் இருந்த பெட்ரோலை உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தீ வைத்துள்ளார்.இதில் பலத்த காயமடைந்த அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சேவாக் இறந்து விட்டார். இதுதொடர்பாக அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: