சேடபட்டி அருகே 3 கிலோ கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது

பேரையூர், பிப்.27: சேடபட்டி போலீசார் நேற்று அப்பகுதியில் போதைப்பொருள் தடுப்பது சம்மந்தமாக ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பெருங்காமநல்லூர் அருகே சென்ற ஆம்னி காரை வழிமறித்து சோதனை செய்ததில், அதில் 3 கிலோ கஞ்சா மற்றும் ரூ.18 ஆயிரம் ரொக்கப்பணம், கார் ஆகியவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த காரில் கஞ்சா கொண்டு வந்த அழகுரெட்டியபட்டியைச் சேர்ந்த பாண்டி மகன் ரவி(28), அர்ஜூன் மகன் பிரகாஷ்(26), பெருமாள் மகன் சின்னச்சாமி(22) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைந்தனர்.

Related Stories: