மின் நுகர்வோருக்கு அபராதம்

மதுரை, பிப். 26: மதுரை வடக்கு பெருநகர் கோட்டத்தை சேர்ந்த கே.கே.நகர் மின் பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட மின் இணைப்புகள், செயற்பொறியாளர் மலர்விழியால் ஆய்வு செய்யப்பட்டது. இதில் வடக்கு கோட்டத்திற்குட்பட்ட 15 மின் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஈடுபட்டனர். ஆய்வின் மூலம், மின்சாரத்தை தவறான முறையில் உபயோகம் செய்த நுகர்வோர்களிடம் இருந்து ரூ.13 ஆயிரத்து 958 வசூல் ெசய்யப்பட்டது. மேலும் இக்குழுவினர் ஆய்வு மூலமாக மொத்தம் ரூ.33 ஆயிரத்து 318 வசூலானது.

Related Stories: