சத்தியமங்கலம், பிப்.27: பண்ணாரி சோதனைச்சாவடியில் மாநில போக்குவரத்து ஆணையர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி அம்மன் கோயில் பகுதியில் தமிழக, கர்நாடக மாநில எல்லையில் வட்டார போக்குவரத்து துறை, காவல்துறை மற்றும் வனத்துறை சார்பில் 3 சோதனைச்சாவடிகள் உள்ளன. இந்த சோதனைச்சாவடிகளில் 24 மணி நேரமும் வாகனங்கள் சோதனை செய்யப்படுகிறது. இந்நிலையில், நேற்று சத்தியமங்கலம் வந்த மாநில போக்குவரத்து ஆணையர் தென்காசி ஜவகர் பண்ணாரி சோதனைச்சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.