ஓய்வூதியம், பணிக்கொடை வழங்க கோரிக்கை

ஈரோடு, பிப்.27: ஓய்வூதியம், பணிக்கொடை வழங்க வேண்டும் என துப்புரவு தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கிராம பஞ்சாயத்து டேங்க் ஆப்ரேட்டர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் சங்கம் சார்பில் மாநில தலைவர் சண்முகம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:ஈரோடு மாவட்டத்தில் உள் 225 கிராம ஊராட்சிகளிலும் பணியாற்றி வரும் துப்புரவு மற்றும் டேங்க் ஆப்ரேட்டர் பணியாளர்களின் நலன் காக்க தமிழ்நாடு ஊரக வளர்ச்சி திட்ட இணையதளத்தில் விபரங்களை பதிவிட வேண்டும். ஆனால், இதுதொடர்பாக இயக்குநர் உத்தரவிட்டும் ஊராட்சி செயலாளர்கள் நிறைவேற்றாமல் உள்ளனர். இதனால், பல தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்பலன்கள் கிடைக்காமல் உள்ளது.

பல ஊராட்சிகளில் பணம் இல்லை எனக்கூறி 4 மாதமாக ஊதியம் வழங்காமல் உள்ளனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலாளரிடம் கேட்டால் உரிய பதில் அளிப்பதில்லை. சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று பணி ஓய்வுபெற்ற துப்புரவு பணியாளர்களுக்கு கிடைக்க வேண்டிய ஓய்வூதியம் பணிக்கொடைகளை தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.

Related Stories: