×

கொலை மிரட்டல் விடுத்தவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

கடலூர், பிப். 27:  கடந்த 11ம் தேதி புதுச்சேரி அடுத்த குறவன்மேடு பகுதியை சேர்ந்த சபரிநாதன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது குறவன் மேடு பகுதியைச் சேர்ந்த கோபி (26), நிரபு மற்றும் தீரன் ஆகியோர் வழிமறித்து திருமண விருந்துக்கு அழைக்காதது குறித்து தகராறு செய்துள்ளனர். மேலும் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் கோபி கைது செய்யப்பட்டார். விசாரணையில் கோபி மீது பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இவரது குற்ற செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்ட எஸ்பி  அபினவ் பரிந்துரையின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கோபியை கைது செய்ய ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டார். இதையடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தில் கோபி கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags : Murder Thief ,
× RELATED லாரி மோதி முன்னாள் திமுக நகர செயலாளர் பலி