×

பெண்கள் கல்லூரியில் சர்வதேச தாய்மொழி தின விழா

கரூர், பிப். 26: கரூர் கோடங்கிப்பட்டியில் உள்ள சாரதா பெண்கள் மகளிர் கல்லூரியில் சர்வதேச தாய்மொழி தினவிழா நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவன தலைவர் சுவாமி சுத்தானந்த மகராஜ், செயலாளர் சுவாமி சத்தியானந்த மகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கினர். பாரதிதாசன் பல்கலைக் கழக பதிவாளர் கோபிநாத், தேசிய சிந்தனை கழக மாநில அமைப்புச் செயலாளர் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

முன்னதாக கல்லூரி முதல்வர் மணிமேகலை ஆண்டறிக்கை வாசித்தார். நிகழ்வினை தொடர்ந்து, மாணவிகளின் நடனம் மற்றும் நாட்டிய நாடகம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்வுகளில் ஏராளமான மாணவிகள், பேராசிரியர்கள் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக சென்று அமராவதி ஆற்றங்கரையோர பகுதிகளில் இதுபோல மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சப்படுவதை கண்காணித்து அகற்றும் பணியை மேற்கொண்டனர்.

Tags : Mother's Day ,Women's College ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் பல்வேறு...