×

அகற்ற சென்ற அதிகாரிகளால் பரபரப்பு ரயில் நிலையம் முதல் சேலம் பைபாஸ் வரை மந்தகதியில் நடந்து வரும் சாலை பணியால் பாதிப்பு

கரூர், பிப். 26: கரூர் நகராட்சிக்குட்பட்ட ரயில்வே நிலைய பகுதியில் இருந்து சேலம் பைபாஸ் சாலை வரை நடைபெற்று வரும் அம்மா சாலை பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நகராட்சி பகுதியில் நிலவி வரும் வாகன நெருக்கடியை சமாளிக்கும் வகையில் கரூர் ரயில் நிலைய வளாக பகுதியில் இருந்து சேலம் பைபாஸ் சாலை வரை அம்மா சாலை அமைக்கும் திட்டத்துக்கான பூமி பூஜை சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.

தற்போது இந்த சாலை அமைக்கும் பணி மந்தகதியில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலையில் கரூர் திண்ணப்பா கார்னர் பகுதியில் இருந்து சேலம் புறவழிச்சாலை மற்றும் கோவை சாலை ஆகிய முக்கிய சாலைகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இந்த சாலைகளில் நிலவி வரும் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் அம்மா சாலை திட்டப்பணிகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. எனவே இந்த சாலைப்பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு இந்த சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : recession ,railway station ,Salem Bypass ,
× RELATED மானாமதுரை ரயில்நிலையத்தில் மீண்டும்...