×

திருப்பூர் தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் தி.மு.க. உட்கட்சி தேர்தல்

திருப்பூர், பிப்.26: திருப்பூர் தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் தி.மு.க., உட்கட்சி தேர்தல் வருகிற 27, 28ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது.இதுகுறித்து திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கை:திராவிட முன்னேற்ற கழகத்தின் 15வது பொதுத் தேர்தல் கழகத் தலைமையால் பிப்ரவரி 21ம் தேதி முதல் மார்ச் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. திருப்பூர் மாவட்டத்தின் தலைமை கழக பிரதிநிதியாக உள்ள அந்தநல்லூர் துரைராஜ் தலைமையில்,  வரும் 27, 28 ஆகிய தேதிகளில் பொள்ளாச்சி தெற்கு (வடக்கு), உடுமலை பேட்டை மேற்கு, உடுமலைபேட்டை கிழக்கு, குடிமங்கலம், மடத்துக்குளம், குண்டடம், தாராபுரம், மூலனூர், வெள்ளகோவில், காங்கயம் வடக்கு, காங்கயம் தெற்கு, சென்னிமலை தெற்கு ஆகிய ஒன்றியங்களுக்கு தேர்தல் நடக்கிறது.

இதில் மாவட்ட கழகத்தால் தனசேகர் (தாராபுரம் நகர செயலாளர்), தண்டபானி( மூலனூர் பேரூர் செயலாளர்), உதயசந்திரன்( இளைஞர் அணி துணை அமைப்பாளர்), சந்திரசேகரன்( மாவட்ட கழக பிரதிநிதி), துரைசாமி (கொளத்துப்பாளையம் பேரூர் செயலாளர்), ராமசாமி ( சென்னிமலை பேரூர் செயலாளர்), முத்துகுமார் (வெள்ளகோவில் நகர செயலாளர்), பழனிசாமி (உடுமலை நகர செயலாளர்), மணிவண்ணன் (காங்கயம் நகர செயலாளர்), மத்தீன் (உடுமலை நகர செயலாளர்), பாலமுரளி ( மடத்துக்குளம் பேரூர் செயலாளர்), சந்திரமோகன் ( இளைஞர் அணி துணை அமைப்பாளர்), முத்துகுமார் (ருத்ராவதி பேரூர் பொறுப்பாளர்) ஆகியோர் பிரதிநிதிகளாக அனுப்பபட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : DMK ,district ,Tirupur ,elections ,
× RELATED நீலகிரி மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம்