×

அவினாசிபாளையம் ஜெய்ஸ்ரீராம் அகாடமி மெட்ரிக் பள்ளியில் ஆண்டு விழா

திருப்பூர், பிப்.26: திருப்பூர், அவினாசிபாளையம் ஹெய்ஸ்ரீராம் அகாடமி மெட்ரிக்குலேசன் பள்ளியில் இரண்டாம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.விழாவிற்கு பள்ளியின் தலைவர் தங்கராஜ் தலைமை வகித்தார். பள்ளியின் துணை தலைவர் முத்து அருண் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக முன்னாள் போலீஸ் அதிகாரி கலியமூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பள்ளியின் முதல்வர் யமுனாதேவி வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளியின் தமிழ் ஆசிரியர் தியாகராஜன் எழுதிய பாலைவனப்பூக்கள் என்ற கவிதைநூல் வெளியிடப்பட்டது. பின் மாணவ மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளியின் நிர்வாக அலுவலர் சரவணன் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Tags : Avinasipalayam Jaisreeram Academy Matric School ,
× RELATED அமைச்சர் முன்னிலையில் பாஜவினர் 100 பேர்...