கெங்கவல்லி, பிப்.26: சேலம் மாவட்டம் கெங்கவல்லி அடுத்த கடம்பூரில் வரும் 29ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. ஆத்தூர் - கடம்பூர் சாலையில் உள்ள காலி நிலத்தில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று முன்தினம் குழு தலைவர் லோகநாதன் தலைமையில் நடந்தது. தொடர்ந்து வாடிவாசல், மாடுபிடி மைதானம், பார்வையாளர் பகுதி உள்ளிட்டவை அமைக்கும் பணி துவங்கியுள்ளது.