சேலம், பிப். 26: சேலம் அருகே கடந்த 2018ம் ஆண்டு காணாமல் போன ரியல் எஸ்டேட் அதிபர், கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடலை மேட்டுப்பாளையத்தில் வீசி சென்ற 4 நண்பர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள நாச்சம்பட்டி செலவடையை சேர்ந்தவர் சக்திவேல்(38).ரியல் எஸ்டேட் அதிபர். இவருக்கு ரேவதி(32) என்ற மனைவியும், சிவப்பிரியா(15)மகளும், தர்ஷன்(12) என்ற மகனும் உள்ளனர். சக்திவேல், கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் 18ம்தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது மனைவி ரேவதி, ஜலகண்டாபுரம் போலீசில் புகார் செய்தார். தனது கணவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததாகவும், வெளியே சென்ற அவர் இதுவரை வீடுதிரும்பவில்லை எனவும் கூறியிருந்தார். இதுகுறித்து ஜலகண்டாபுரம் போலீசார் தீவிரவிசாரணை மேற்கொண்டனர். தமிழகம் முழுவதும் அனாதை பிணம் குறித்த தகவலை எடுத்து விசாரித்தனர். இதில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேசன் பகுதிக்குள் 2018ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி, அநாதையாக கிடந்த சடலம் குறித்து விசாரித்தபோது, அது காணாமல் போன ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த சக்திவேல் என்பது தெரியவந்தது.