×

கிருஷ்ணகிரியில் நுகர்வோர் பாதுகாப்பு பயிற்சி

கிருஷ்ணகிரி, பிப்.26: கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு, நிர்வாகத் துறையின் சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு பயிற்சி வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் சார்பில், நுகர்வோர் பாதுகாப்பு பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சியினை மாவட்ட கலெக்டர் பிரபாகர் துவக்கி வைத்து பேசினார்.  அப்போது அவர் பேசியதாவது: இந்திய அரசு உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயச் சட்டத்தை 2011ம் ஆண்டு முதல் இந்தியா முழுவதும் அமல்படுத்தியுள்ளது. இதன் நோக்கம், பொதுமக்களுக்கு பாதுகாப்பான, தரமான உணவு கிடைப்பதை உறுதி செய்தல், உணவு பொருள் தயாரிப்பு தொழிலகங்களில் உணவுப் பொருளின் தயாரிப்பும், தரமும், தற்கால அறிவியல் வளர்ச்சியையொட்டி உணவுப் பொருள் பதப்படுத்தும் நடைமுறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். உணவு தொழில் புரிவோரை பதிவு சான்று அல்லது உரிமம் பெற்று தரமான உணவு பொருள் கிடைக்கச் செய்தல், கலப்பட, காலாவதியான உணவு பொருட்களை தடை செய்தலே ஆகும்.

மேலும், நுகர்வோர்கள் பதிவுச்சான்று, உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே பொருட்களை வாங்க வேண்ம். வாங்கும் பொருட்களின் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி மற்றும் முகவரி போன்றவை சரியாக உள்ளதா என பார்த்து வாங்க வேண்டும். தரமற்ற உணவு பொருள் இருந்தால் உடனடியாக உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பிளாஸ்டிக் பைகளில் சூடான டீ, காபி, சாம்பார், ரசம் விற்கவோ, வாங்கவோ வேண்டாம். எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களை செய்தித்தாளில் வைத்து பயன்படுத்த வேண்டாம். கடைகளில் உணவு பொருட்களை திறந்த நிலையில் வைத்து விற்பனை செய்ய கூடாது. உபயோகப்படுத்திய சமையல் எண்ணையை திரும்ப, திரும்ப பயன்படுத்த கூடாது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், பள்ளி மாணவிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Krishnagiri ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்