×

பஸ்தலபள்ளி ஊராட்சியில் சாலை பணிகள் துவக்கம்

சூளகிரி, பிப்.26: சூளகிரி தாலுகா பஸ்தலபள்ளி ஊராட்சியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் துவங்கியது.  சூளகிரி வடக்கு ஒன்றியம் பஸ்தலப்பள்ளி ஊராட்சி பொன்னள்நத்தம் கிராமத்தில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி துவக்க விழா நேற்று நடந்தது. வேப்பனப்பள்ளி எம்எல்ஏ முருகன் பூமி பூஜையை செய்து பணியை துவக்கி வைத்தார். இதில் காலிங்காவரம் ஊராட்சி கொடிதி ம்மனப்பள்ளியில், எம்.எல்ஏ மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 4.12 லட்சம் மதிப்பில் நியாய விலை கடை கட்ட பூமி பூஜையும், பங்கனல்லி ஊராட்சி ெகட்டுரில் இருந்து அனுமந்தகொட்டாய் வரை தார் சாலை 15 லட்சம் மதிப்பில் பணிகள் துவங்கியது. நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் ஷேக்ரஷீத், ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ், மாவட்ட கவுன்சிலர் சசிகலா பாக்கியராஜ், சூளகிரி பிடிஓ, பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Pastalapalli ,
× RELATED சீதாராமர் திருக்கல்யாணம்