போச்சம்பள்ளி, பிப்.26: பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைபொது செயலாளராக போச்சம்பள்ளி சந்திரசேகரன் பட்டதாரி ஆசிரியர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில தேர்தல் திருச்சியில் நிறுவன தலைவர் மாயவன் தலைமையில் நடந்தது. மாநில தலைவர் பக்தவத்சலம், பொது செயலாளர் சேதுசெல்வம், பொருளாளர் ஜெயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சந்திரசேகரன், மாநில துணை பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். அவருக்கு சக ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.