×

மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

கிருஷ்ணகிரி, பிப்.26: குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை எண்ணேகொல்புதூர் தென்பெண்ணை ஆற்று பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கிருந்த சிலர் ஆற்றில் இருந்து டிராக்டரில் மணல் ஏற்றி கொண்டிருந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பிச்சென்றனர். இதனையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், பதிவு எண்ணை வைத்து விசாரித்தனர். விசாரணையில், அந்த டிராக்டரின் உரிமையாளர் எண்ணேகொல்புதூர் கிராமத்தை சேர்ந்த காந்தி (32) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED வாக்குப்பதிவு குறைந்த பகுதியில் அதிகாரிகள் விழிப்புணர்வு