×

தேன்கனிக்கோட்டை அருகே விவசாயியை தாக்கி மிரட்டல் விடுத்தவருக்கு 6 ஆண்டு சிறை

ஓசூர், பிப்.26:தேன்கனிக்கோட்டை அருகே விவசாயியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஓசூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே, வண்ணாத்திப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தாதப்பன். இவருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த பசுவன்(40) என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி இரவு 7 மணியளவில் அஞ்செட்டி பஸ் நிலையம் பகுதியில் ஒரு பேக்கரி கடை அருகே தாதப்பன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பசுவன், தாதப்பனை கத்தியால் சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில், அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிந்து பசுவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு நேற்று ஓசூர் உதவி அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி மோனிகா வழக்கினை விசாரித்து குற்றம்சாட்டப்பட்ட பசுவனுக்கு 6 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ₹2 ஆயிரம் அபராதமும், கட்டத்தவறினால் ஓராண்டு கடுங்காவல் தண்டனையையும் விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில், அரசு தரப்பில் வக்கீல் ஜீவானந்தம் வாதாடினார்.

Tags : jail ,
× RELATED பாளையங்கோட்டை சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு..!!