கோவை, பிப்.26: கோவை மதுக்கரை காந்திநகர் பகுதியில் ராணுவத்தின் துப்பாக்கி சுடும் தளம் மற்றும் மரப்பாலம் தர்மலிங்கேஸ்வரர் ேகாயில் வனப்பகுதியில் கப்பல் படை துப்பாக்கி சுடும் தளம் உள்ளது. இந்த பகுதியில் பொதுமக்கள் செல்ல அனுமதி கிடையாது. வனப்பகுதியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவு பகுதி ஷூட்டிங் ரேஞ்ச் தளமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் இங்கே ராணுவம் மற்றும் கப்பல் படை வீரர்களுக்கு துப்பாக்கி சுட பயிற்சி தரப்படுகிறது. கடந்த சில நாட்களாக இங்கே யானைகள் நடமாட்டம் அதிகமாகி விட்டது.