×

துப்பாக்கி சுடும் தளத்தில் யானைகள்

கோவை, பிப்.26: கோவை மதுக்கரை காந்திநகர் பகுதியில்  ராணுவத்தின் துப்பாக்கி சுடும் தளம் மற்றும் மரப்பாலம் தர்மலிங்கேஸ்வரர் ேகாயில் வனப்பகுதியில் கப்பல் படை துப்பாக்கி சுடும் தளம் உள்ளது. இந்த பகுதியில் பொதுமக்கள் செல்ல அனுமதி கிடையாது. வனப்பகுதியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவு பகுதி ஷூட்டிங் ரேஞ்ச் தளமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் இங்கே ராணுவம் மற்றும் கப்பல் படை வீரர்களுக்கு துப்பாக்கி சுட பயிற்சி தரப்படுகிறது. கடந்த சில நாட்களாக இங்கே யானைகள் நடமாட்டம் அதிகமாகி விட்டது.

தர்மலிங்கேஸ்வரர் ேகாயில் அருகே துப்பாக்கி சுடும் தளத்தில் குட்டிகளுடன் யானைகள் சுற்றுகின்றன. 3 ஆண்டிற்கு முன், துப்பாக்கி சுடும் தளத்தில் சுற்றிய மகாராஜ் என அழைக்கப்பட்ட யானைகளை மயக்க ஊசி போட்டு பிடித்தனர். அந்த யானையை டாப்சிலிப் கொண்டு சென்றபோது அது இறந்துவிட்டது.  துப்பாக்கி சுடும் தளத்தில் சுற்றும் யானைகளை விரட்டினால் குடியிருப்பு பகுதி நோக்கி செல்லும் நிலையிருப்பதால் வனத்துறையினர் தவிப்படைந்துள்ளனர்.


Tags : sniper site ,
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்