ஈரோடு, பிப். 26: மத்திய அரசின் கிராமப்புற அமைச்சக வழிகாட்டுதலின்படி கனரா வங்கி தொழிற்பயிற்சி நிலையம் நடத்தும் இலவச ஆடு வளர்ப்பு பயிற்சி வரும் 2ம் தேதி தொடங்குகிறது. இந்த பயிற்சி 10 நாட்கள் ஈரோடு கரூர் பைபாஸ் ரோடு கொல்லம்பாளையம் ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது. பயிற்சி பெற தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், சுயஉதவிக்குழுக்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம். பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் இது தொடர்பான விபரங்களுக்கு பயிற்சி நிலையத்தை தொடர்பு கொள்ள கனரா வங்கி முதுநிலை மேலாளர் சுதர்சன் கேட்டுக் கொண்டுள்ளார்.