கால் முறிவால் அவதிப்பட்ட முதியவர் தூக்கிட்டு தற்கொலை

ஈரோடு, பிப். 26:  ஈரோடு மாவட்டம் பெருந்துறை திங்களூர் கிரேநகர் சி.எஸ்.ஐ 2வது வீதியை சேர்ந்தவர் ராஜ் (63). பஞ்சர் கடை உரிமையாளர். ராஜ் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்டது. இவரது இளைய மகள் சுகுணா தந்தை ராஜை பராமரித்து, வந்தார். கடந்த 20ம் தேதி சுகுணா உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டார். பின்னர் நேற்று முன்தினம் மதியம் வீட்டிற்கு வந்துபார்த்தபோது, வீட்டின் கதவு உள்பக்கம் தாழிடப்பட்டு, துர்நாற்றம் வீசியது. இதனால், அதிர்ச்சியடைந்த சுகுணா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ராஜ் தூக்குபோட்டு இறந்த நிலையில் கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்து சென்ற திங்களூர் போலீசார் ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: