ஸ்பிநகர், பிப்.26: சாலையில் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் கரும்புகையை வெளியிட்டு செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் நாள்தோறும் ஏராளமான வாகன போக்குவரத்து சென்று வருகிறது. இதுமட்டுமன்றி ைபக், கார், லாரி மற்றும் சரக்கு லாரி போக்குவரத்தும் அதிகளவில் நடைபெறுகிறது.இவ்வாறு செல்லும் வாகனங்கள் சுற்றுச்சூழல் பாதிக்கும் வகையில் கரும்புகையை வெளியிட்டு கொண்டு செல்கின்றன. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பது மட்டுமல்லாமல் சிலசமயங்களில் சாலையில் செல்லும் பொதுமக்களுக்கும் மூச்சு திணறால் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. தினமும் கரும்புகையை சுவாசிப்பதால் நுரையீரல் பாதிப்பு, ஆஸ்துமா உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிக புகை கக்கும் வாகனங்களுக்கு பின்னால் செல்லும் வாகனங்கள் பாதை தெரியாமல் தடுமாறுகின்றன. விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.