கழுகுமலை, பிப் 26: கழுகுமலையிலிருந்து வேலாயுதபுரம் செல்லும் சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனை உடனடியாக சீரமைக்க வேண்டுமென கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர். கழுகுமலையிலிருந்து கயத்தார் மெயின்ரோட்டில் உள்ள வேலாயுதபுரம் வரை தார் சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. இந்த சாலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டதால் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காட்சியளிக்கிறது.