×

பெரம்பலூர் பழைய பஸ் ஸ்டாண்டில் அரசின் 3ம் ஆண்டு நிறைவு சிறப்பு புகைப்பட கண்காட்சி

பெரம்பலூர்,பிப்.26:பெரம்பலூர் பழைய பஸ்டாண்டில் செய்தி மக்கள் தொடர்புத் துறை மூலம் நடத்தப்பட்ட சிறப்பு புகைப்படக் கண்கா ட்சியை கலெக்டர் மற்றும் எம்எல்ஏக்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தமிழக அரசின் மூன்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மூலம் பெரம்பலூர் பழைய பஸ் டாண்டு பகுதியில் சிறப்பு புகைப்பட கண்காட்சியை நடத்தப்பட்டது. இக்கண்காட்சியை பெர ம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா திறந்து வைத்தார். நிகழ்ச்சியின்போது பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ தமிழ்ச் செல்வன், குன்னம் சட்டமன்றத் தொ குதி எம்எல்ஏ ராம ச்சந்திரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இப்புகைப்பட கண்காட்சியில் முன்னாள் முதல்வர் அறிவித்து செயல்படுத்திய திட்டங்கள், இந்நாள் முதல்வரின் தலைமையில் தமிழக அரசின் மூன்றாமாண்டு சாதனைகள், பெரம்பலூர் மாவட்டத்தில் நடை பெற்ற அரசுத் திட்டங்கள், திறப்பு விழாக்கள் குறித்த புகைப்படங்கள் 3ம்ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடந்த புகைப்படக் கண் காட்சியில் இடம்பெற்றிருந்தன. இதனை பொதுமக்கள், பயணிகள், வியாபாரிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கா னோர் பார்வையிட்டனர். நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர் ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தெய்வநாயகி, பெரம்பலூர் தாசில்தார் பாரதி வளவன் உள்ளிட்டப் பலரும் கலந்து கொண்டனர்.

Tags : Government ,Anniversary Special Photo Exhibition ,Perambalur Old Bus Stand ,
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...