×

வெள்ளாளவிடுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இன்று திறப்பு

புதுக்கோட்டை, பிப்.26: புதுக்கோட்ைட கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் காரீப் கொள்முதல் பருவம் 2019-20 நெல் அறுவடை காலத்தை கருத்திற்கொண்டு மாவட்ட நிர்வாகத்தால், கந்தர்வகோட்டை தாலுகா வெள்ளாளவிடுதி கிராமத்தில் கடந்த ஜனவரி மாதம் 7ம் தேதி முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் பெருமளவில் பயன் பெறும் வகையில் நேரடியாக நெல் கொள்முதல் செய்ய ஏதுவாக, வெள்ளாளவிடுதி கிராமத்தில் மேலும் ஒரு நேரடி நெல்கொள்முதல் நிலையம் வெள்ளாளவிடுதி-2 என்கிற பெயரில் இன்று (புதன்கிழமை) முதல் செயல்பட உள்ளது என கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

Tags : procurement center ,Paddy ,
× RELATED சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம்!:...