×

பாலத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி பலி

கும்பகோணம், பிப். 26:கும்பகோணம் அடுத்த ஏராகரம் மேலத்தெருவை சேர்ந்த விவசாயி செந்தில்குமார் (37).  இவர் கடந்த 23ம் தேதி வாய்க்கால் பாலத்தில் அமர்ந்திருந்தார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் படுகாயமடைந் அவரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து சுவாமிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED தஞ்சாவூரில் சிறுதானிய பயிர்கள்...