மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டி

தஞ்சை, பிப். 26: தஞ்சை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நடந்தது. போட்டிகளை கலெக்டர் கோவிந்தராவ் துவக்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவீந்திரன் சிறப்புரையாற்றினார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அந்தோணி அதிஷ்டராஜ் வரவேற்றார். போட்டியில் 650 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

பின்னர் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. கூடைப்பந்து பயிற்றுநர் சண்முகபிரியன் நன்றி கூறினார்.

Related Stories: