திருவையாறு, பிப். 26: திருவையாறு அருகே சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கொத்தனார், சிகிச்சை பலனின்றி இறந்தார். திருவையாறு அருகே கல்யாணபுரத்தை சேர்ந்த கொத்தனார் சுரேஷ்குமார் (40). இவருக்கு திருமணமாகி அருணா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த 20ம் தேதி சுரேஷ்குமார் சைக்கிளில் நடுக்கடை முகமதுபந்தர் அருகே வந்தார். அப்போது நிலை தடுமாறி சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதையடுத்து அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து திருவையாறு போலீசில் சுரேஷ்குமார் தம்பி செந்தில்குமார் (37) புகார் செய்தார். சப்இன்ஸ்பெக்டர் அப்பர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.